நம் வீட்டில் மகாலட்சுமி குடியிருந்து, நமக்கு அருள வழிபாட்டு முறை : மூலிகை வசிய மை "வாராகி".

நம் வீட்டில் மகாலட்சுமி குடியிருந்து, நமக்கு அருள வழிபாட்டு முறை : மூலிகை வசிய மை "வாராகி".

                    ஒரு சிறிய மண்கலசம் (மூடியுடன்) எடுத்து கொள்ள வேண்டும். உப்பு, சர்க்கரை, பச்சரிசி, புளி, பருப்பு, நவ தானியம், புனுகு, குங்கும பூ, கஸ்துரி, ஜவ்வாது, ஐம்பொன், சிறிய வலம்புரி சங்கு, வெற்றிலை, பாக்கு அனைத்தயும் வியாழக்கிழமையே வாங்கி வைத்துக் கொள்ளவும்.


                    வெள்ளிக்கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் மேற்கூறிய அனைத்து பொருளையும், கலசத்தில் இட்டு மண் கலசத்திற்கு விபூதி பட்டையிட்டு, சந்தனம், குங்குமம் வைத்து உங்கள் பூஜை அறையில் வைக்க வேண்டும்.

                    மகாலட்சுமியை மனதார வேண்டி "தாயே நீ என்றும் என்குடும்பத்தில் இருந்து அருள வேண்டும்" என பிராத்தனை செய்து விட்டு, தூப தீபம் காட்டி, பின்வரும் மந்திரத்தை 

மந்திரம் :

"ஒம் தன தான்ய லஷ்மியை வசி வசி வசியை நமஹ."

108 முறை கூறி பின் கலசத்தை மூடி பூஜையறையில் வைக்கவும்.

                    வெள்ளிக்கிழமை தோறும் 108 முறை மந்திரம் கூறி வணங்க வேண்டும், மண்கலசம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை, முதல் முறை வணங்க தொடங்கியதும் அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் பணவரவு உயர்வதை கண்கூடாக உணரலாம்.

                    இந்த எளிய பரிகார முறையை செய்து வாழ்வில் வளம் பெற வேண்டுகிறோம்.


Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.