"ரூம் றீம் சிம்ரா" அகத்தியர் அருளிய திருநீற்று மந்திர பலன் : மூலிகை வசிய மை "வாராகி".

"ரூம் றீம் சிம்ரா" அகத்தியர் அருளிய திருநீற்று மந்திர பலன் : மூலிகை வசிய மை "வாராகி".

                    "திருநீறினை யாரிடம் இருந்து, எப்படி பெற்றுக் கொள்ள வேண்டும்" என்பது பற்றி அகத்தியர் தனது "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் அருளியிருக்கிறார்.


 

"ஆமப்பா சூட்சம் வெகு சூட்சமான

அருமையுள்ள மந்திரத்தைத் தியானம்பண்ணி

ஓமப்பா நல்லோர்க ளிடமாய்மைந்தா

உத்தமனே விபூதியுட நெதுவானாலும்

தாமப்பா தனதாக வாங்கும்போது

சங்கையுட நவர்கள்செய்யுந் தவமெல்லாந்தான்

வாமப்பால் பூரணத்தின் மகிமையாலே

வந்துவிடும் மனதறிவால் மனதைப்பாரே."

"மனதாக நல்லோர்க ளிடத்திலிந்த 

மந்திரத்தைத் தானினைத்துப் பூரித்தாக்கால்

மனதாக அவர்கள் செய்யுந் தவப்பலந்தான்

மந்திரங்கள் தன்னுடனே வந்துசேரும்

மனதாக மூடர்வெகு வஞ்சர்கிட்ட

மணிமந்திர பூதியுட நெதுவானாலும்

மனதாக அவர்களிடம் வாங்கும்போது

மக்களே அவர்கள்குணம் வருகும்பாரே."

                    "திருநீறினை ஒருவர் மற்றவருக்கு கொடுக்கும் போது, கொடுக்கிறவர் செய்த தவப் பயன் மற்றும் குணநலன்கள், வாங்குவோருக்கு போய்ச் சேர்ந்திடுமாம். எனவே; இதை உணர்ந்து, தியானத்தில் சிறந்து, நல்ல குண நலன்கள் உள்ளவர்களிடம் மட்டுமே, திருநீற்றினை பெற வேண்டும்" என்கிறார்.

                    மாறாக; வஞ்சக எண்ணம் கொண்டோரிடம் இருந்து பெற்றால், அது தீய பலன்களையே கொண்டு தருமாம். இப்படி நல்லோரிடம் திருநீறு வாங்கிடும் போது அந்த பலனை முழுவதுமாக நாம் பெற்றிட ஒரு சூட்சும மந்திரம் இருப்பதாக அகத்தியர் கூறுகிறார்.

சூட்சும மந்திரம் :

"சாற்றியதோ ருபதேசம் நன்றாய்கேளு

சங்கையுடன் 'ரூம்றீம் சிம்ரா'வென்று 

தேற்றியதோர் சித்தர்

சிவ யோகிதானும்

திருநீறு தானெடுத்துக் கொடுக்கும்போது

பார்த்திபனே மந்திரத்தை நினைத்துவாங்க

பதிலாக அவர்பிலமும் வருகும்பாரே."

                    "ஞானிகள்,சித்தர்கள் யோகிகள்,தவமுனிவர்கள் இவர்களிடமிருந்து நாம்  திருநீர் வாங்கும் போது 'ரும் றீம் சிம்ரா! ரும் றீம் சிம்ரா!! ரும் றீம் சிம்ரா!!!' என்கிற மந்திரத்தை மனதில் உச்சரித்து கொண்டு திருநீர் வாங்கவேண்டுமாம். அப்போது; அவர்களுடைய தவபலனில், உங்களுக்கு புண்ணியபலன் கிடைப்பதுடன், அவர்களுடைய குணாதிசியங்களும் உங்களுக்கு வந்து சேரும்." என்கிறார்.

                    எல்லோரும் மேற்சொன்ன மந்திரத்தை மனப்பாடம் பண்ணி,ஞானிகள், சித்தர்கள் யோகிகள், தவமுனிவர்கள் இவர்களிடமிருந்து  திருநீர் வாங்கும் போது  மேற்கண்ட மந்திரத்தை மனதில் உச்சரித்து கொண்டு அவர்களின் அருளாசி பெற்று, சிறப்பாக வாழ்ந்திட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.