"ராம நாம"த்தின் மகிமை : மூலிகை வசிய மை "வாராகி".

"ராம நாம"த்தின் மகிமை : மூலிகை வசிய மை "வாராகி".

                    உலகிலேயே உயர்ந்த நாமங்களுள் ஒன்று தான்  "ஸ்ரீ ராம நாமம்". "ராமா" என்று ஒருமுறை கூறினால், செய்த பாவங்கள் தீர்ந்து விடும். ஸ்ரீ ராமபிரான் இலங்கை செல்வதற்காக, வானரங்கள் பாலம் அமைத்துக் கொண்டிருந்தனர். எல்லா வானரங்களும் கற்களைத் தூக்கி கடலுக்குள் போட்டன, ஒவ்வொரு கல்லும் மற்றொரு கல்லின் மீது சரியாக அமர்ந்தது. ஆஞ்சநேயர் அந்தப் பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

ராமபிரானும் இதை கவனித்துக் கொண்டிருந்தார். அவர் மனதிலும்  ஆசை ஏற்பட்டது. "நாமும் இந்த வானரங்களுடன் இணைந்து கல்லைத் தூக்கிப் போட்டால் என்ன?" எனக் கருதியபடியே, ஒரு கல்லை எடுத்து கடலுக்குள் போட்டார். அந்தக்கல், சரியாக மற்ற கற்களின் மீது அமரவில்லை. அந்தக்கல்லை தண்ணீர் அடித்துச் சென்று விட்டது. ராமபிரானுக்கு வருத்தம். "இந்த வானரங்கள் போடும் கற்கள் மட்டும், மற்றொரு கல்லின் மீது அமர்ந்து விட்டதே ! இதற்கு என்ன காரணமாக இருக்கும்?" என வருத்தப்பட்டார். 

                    ஆஞ்சநேயர் ராமர் அருகில் வந்தார், அவர் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார். "ஆஞ்சநேயா நான் செய்ததை நீ பார்த்து விட்டாயா ? எனக்கு ஒரு கல்லை போடக் கூடத் தெரியவில்லை. என்னை நினைத்து, எனக்கே வெட்கமாக இருக்கிறது." என்றார்.

                    அதற்கு ஆஞ்சநேயர், "ப்ரபோ! எல்லா வானரங்களும், உங்கள் தாரக மந்திரமான "ராம், ராம்" என்ற உங்கள் நாமத்தைச் சொல்லிக் கொண்டே, கற்களைத் தூக்கிப் போட்டன. அவை சரியாக அமர்ந்தது. நீர் ராமனாகவே இருந்தாலும், "ராம நாமம்" சொல்லி போட்டிருந்தால், அது சரியாக கற்களில் போய் அமர்ந்திருக்கும்." என்றாராம்.

                    "ராம நாமம்" அவ்வளவு சக்தி வாய்ந்தது. "ராம நாமம்" மிகவும் அற்புதமானது. ஸ்ரீ ராமரின் பெயரை இடைவிடாது உச்சரிப்பதன் மூலம்; எல்லா உயிர்களிடத்தும் ராமனை காணலாம், எல்லா வகையான துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறலாம், பாவங்களிலிருந்து கடைந்தேறலாம்.

                    இவ்வளவு சக்தி வாய்ந்த 'ராம நாமத்தை' தெருவில் நடந்து போகும் போதும், ஆபீஸில் வேலை செய்யும் போதும், வீட்டில் சமையல் செய்யும் போதும் சொல்லலாம்....!!!!

                    "ராம்" என்ற சொல் புனிதமான "ஓம்" என்னும் மந்திரத்திற்கு சமமானது. நம் தமிழ்நாட்டில் தான் 'குட்மார்னிங்', 'வணக்கம்' என்று சொல்கிறோம். வடநாட்டு பக்கம்; காலையில் வரும் பால்காரன் கூட, "ராம் ராம்" என்று கூப்பிட்டுத்தான் பாலை ஊற்றுவான்.

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.