இந்து மதத்தில் உதித்த ஒரு இமயம் : என்றும் வழிபட வேண்டிய எங்கள் மகான், ஸ்ரீ நாராயணகுரு : சித்தர்க்கடியான், ஆசிரியர், TEMPLES OF TAMILAGAM

இந்து மதத்தில் உதித்த ஒரு இமயம் : என்றும் வழிபட வேண்டிய எங்கள் மகான், ஸ்ரீ நாராயணகுரு : சித்தர்க்கடியான், ஆசிரியர், TEMPLES OF TAMILAGAM 


                ஸ்ரீ நாராயணகுரு அவர்கள் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் அருகில் உள்ள செம்பழந்தி என்னும் ஊரில் 1856 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி அன்று மதன் ஆசான் குட்டி, அம்மா தம்பதிக்கு மகனாக பிறந்தார். அப்படி அவர் செய்த சாதனைகள் தான் என்ன அவை எண்ணிலடங்கா

                ஆன்மீகத்தையும் பரப்புவதிலும்,  சமூகங்களுக்கு இடையே இருந்த ஏற்றத்தாழ்வுகளையும் சரி செய்வதிலும் ஒரு சேர வாழ்நாள் முழுவதும் பயணம் செய்தார். சிவன், விஷ்ணு, சக்தி போன்ற தெய்வங்களுக்கு எண்ணற்ற கோவில்களை நாடு முழுவதும் கட்டினார். எளிமையான வழிபாட்டு முறைகளையும் மக்களுக்கு போதித்தார்.

                இளம் வயதிலேயே துறவரம் பூண்ட அந்த மகான், ஏதோ ஒரு தேடுதலை நோக்கி பயணித்துக் கொண்டே இருந்தார் இறுதிவரை. அதை  கண்டறிந்து,  செல்லுமிடமெல்லாம் மக்களுக்கு நன்மைகளை போதித்தார் 

                அவர் வாழ்ந்த கால கட்டத்தில், கேரள மாநிலத்தில் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க மாட்டார்கள். தாழ்த்தப்பட்ட மக்கக்காகவே தனியாக கோவில்களைக் கட்டினார். அக்கால கட்டத்தில் பெருத்த எதிர்ப்பு இருந்தது. அதையும் மீறி, ஆன்மீக ரீதியாக அம்மக்களுக்கு "இறைவனின் அருள் கிடைக்க வேண்டும்" என்று உபதேசித்தார். "இறைவன் முன்பு சாதி, மத, இன வேறுபாடுகள் எதுவும் கிடையாது. இறைவன்அனைத்தையும் கடந்தவர்" என்று கூறினார்.   

                வைக்கம் போராட்டத்தில் இவருடைய பங்கு அளப்பரியது. இவரது தலைமை சீடர் டி கே மாதவன் அவர்களின் மூலமாகத்தான் இந்த வைக்கம் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில். மிகவும் செல்வாக்கான அனைத்து மக்களாலும் விரும்பப்படும் கூடிய மனிதராக ஸ்ரீ நாராயண குரு இருந்தார். அவர் அனைத்து மக்களும் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் செய்தார். அவரது சீடர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு போராட்டத்தில் கலந்துகொள்ள உதவும்படி வேண்டுகோள் விடுத்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் இவரது சொல் கேட்டு அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதுபோல எண்ணற்ற போராட்டங்களை செய்து, கேரள மாநிலத்தில் இருந்த ஏற்றத் தாழ்வை ஒழிக்க அரும்பாடு பட்டார், அதுவும் ஆன்மீக ரீதியாக. 

                மகாத்மா காந்தி அவர்கள் பொதுவாக எந்த சாமியாரையும் சந்திப்பதை விரும்பவில்லை. அவர் விரும்பிய சந்தித்த ஒரே மகான் "ஸ்ரீ நாராயண குரு" அவர்கள் மட்டும்தான். அவரை "அவதார புருஷர்" என்று காந்தி வாழ்த்தினார்

                நமது புரட்சிக் கவி சுப்பிரமணிய பாரதி பாரதிதாசன், இந்திய பெருங்கவி  தாகூர் ஆகியோரது பெரு மதிப்பை பெற்று இருந்தார். "இரண்டாம் புத்தர்" என்று மக்களால் பார்க்கப்பட்டார்.

                எண்ணற்ற பள்ளிக்கூடங்களை அமைத்தார். இன்று கேரள மாநிலத்தில் 100 சதவீத மக்களுக்கு கல்வி அறிவு பெற்றவர்கள்  இருக்கிறார்கள். அதற்கு மிக முக்கிய காரணம், ஐயா அவர்கள் அமைத்த அடித்தளம் தான். அந்த மாநிலத்தில் ஒரு சின்னஞ்சிறுவனை  கேட்டால் கூட,  ஐயா அவர்கள் மகிமையை சொல்வார்கள். 

                தமிழ், மலையாளம், சமஸ்கிருதம் என பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார். சிறந்த இலக்கியவாதியாக, நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார். அவரது சீடர்கள் வழியாக பல பள்ளிக் கூடங்களையும், மருத்துவமனைகளையும் இந்தியா முழுவதும் அமைக்க செய்துள்ளார்.

                ஸ்ரீ நாராயணகுரு "தர்ம பரிபாலன சபை" என்ற ஒன்றை உருவாக்கி இந்தியா முழுவதும் பரவச் செய்தார். அவரது சீடர்கள், அவர் விட்டு சென்ற பணிகளை இன்று இந்தியா முழுவதும் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

                மலையாள நாடகாட்டியின் படி சிம்மம் மாதத்தில் வரும் சதயம் நாள் அன்று, ஓணம் திருவிழாவின் போது ஸ்ரீ நாராயண குரு நினைவாக "நாராயண ஜெயந்தி" ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. நாராயண ஜெயந்தி கேரளா மாநிலத்தின் "மாநில திருவிழா" ஆதலால், அன்று பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள் என அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் "அரசு விடுமுறை"யாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

                கேரள மக்களின் பெரும் மதிப்பைப் பெற்ற இவருக்கு, இந்திய அரசு தபால் தலை வெளியிட்டு கௌரவப்படுத்தியது. இவரின் புத்தகங்கள் இன்றும் கிடைக்கின்றன. ஆன்மீகத்தையும், சமூக சீர் திருத்தத்தையும் ஒரு சேர வலியுறுத்திய இவர் போன்ற மகான்களை இன்றைய தலைமுறை மறந்துவிடக்கூடாது.

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.