எளிய செயல்கள் மூலம் எப்படி நவகிரகங்களின் ஆசி பெறலாம்? : மூலிகை வசிய மை "வாராகி". 1.படுக்கை அறையில் தலைக்கு அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு, அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ரதோஷம் படி படியாக குறையும்.இந்த விவரத்தை மாற்றியும் சொல்லலாம். படுக்கைக்கு நாம் எடுத்து செல்லும் குடிநீர் காலையில் மீதம் இருந்தால், செடிகளுக்கு குறிப்பாக துளசி அல்லது தொட்டாற்சிணுங்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும். 2.அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு, பொங்கல் கொடுப்பது, சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து, புகழை பெற்று தரும். 3.வசதி இல்லாத குடும்பத்தினருக்கு ஈமச்சடங்குகள் செய்ய பணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல், சனியின் ஆசிகளை கொடுத்து, ஆயுளை விருத்தி செய்யும். 4.ஆசான் ,வேதம் படித்தவர் ,நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது ,குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது , குருவின் ஆசிகள் கிடைக்கும். 5.சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி / குளம் சரி செய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல்