செருப்பினில் தொடங்கி விளக்குமாறில் முடிக்கும் படியாக காளமேகப் புலவர் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கிய பாடல் : சித்தர்க்கடியான்.
செருப்பினில் தொடங்கி விளக்குமாறில் முடிக்கும் படியாக காளமேகப் புலவர் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கிய பாடல் : சித்தர்க்கடியான். ஒரு புலவர் காளமேக புலவரிடம் கேட்டார், “ஐயா, நீர் பெரிய புலவர் என்று பேசிக் கொள்கிறார்களே, உம்மால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா?” என்று. “முருகன் அருளால் முடியும். வேலில் தொடங்கவா? மயிலில் தொடங்கவா?” என்று தன்னிடம் பாடச் சொன்ன புலவரிடம் வினவினார், காளமேக புலவர். "வேலிலும் தொடங்க வேண்டாம். மயிலிலும் தொடங்க வேண்டாம். செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடித்தால் போதும்” என்று குசும்பாகக் கூறிவிட்டார் போட்டிப் புலவர். " என்ன கொடுமை? என் இறைவனை, முத்தமிழ் முதல்வனை, செந்தமிழ் தெய்வத்தை, வெற்றி வேல் அழகனை, கருணைக் கடவுளை, கண்கவர் காளையை, முருகனை பாடும் போது செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிப்பதா? தகுமா? முறையா? என மனம் கேட்க, அதை தகும் என்றும்; முறை என்றும் மிக மிக அழகாக நிரூபித்தார் காளமேக புலவர்; கீழ்க்கண்ட பாடலை பாடியதன் விளைவாக, " செருப்புக்கு வீரர்களை ச் சென்றுயக்கும் வேலன் பொருப்புக்கு நாயகனை ப் புல்ல- மருப்புக்கு