Posts

Showing posts from October, 2020

ஆக்னை எனப்படும் நம் நெற்றியின் மையப் பகுதி மற்றும் சூர்ய, சந்திர கலைகள் பற்றி தெரிந்து கொள்வோம் : சித்தர்க்கடியான்.

  ஆக்னை எனப்படும் நம் நெற்றியின் மையப் பகுதி மற்றும் சூர்ய, சந்திர கலைகள் பற்றி தெரிந்து கொள்வோம் : சித்தர்க்கடியான்.                     உண்மையில் கண்கள் ஏகாக்கிரக சக்தியை வாங்கக் கூடியவைதான். ஞான ஒளியைக் காணவும், இறைவனை அடையவும் கண்களே மூல காரணம். அதாவது; விறகுகளை அடுக்கி, அதில் சிறு நெருப்பை வைத்தால், அது கொழுந்துவிட்டு எரியும். அதுபோலவே, வீட்டிற்க்குள் நடுவீடு என்று ஒன்று உண்டு.                     அங்கு விளக்கு ஏற்றி வணங்கி, தெய்வத்தை வழிபடுவார்கள். அதுபோலவே நம் உடலுக்கு நடுவீடு, நெற்றி நடுவான புருவ மத்தியம். அங்கு ஒளியேற்றி இறைவனை அடையவேண்டும். நம் புருவ நடுவில் அக்கினி, சூரியன், சந்திரன் என்னும் மூன்று ஒளிநாடிகள் இருக்கின்றன. அதில், அக்கினி நாடி உடலுக்கு எப்பொழுதும் உஷ்ணத்தைக் கொடுத்த வண்ணம் இருக்கும். அதனால்தான் ஜுரமோ, தலைவலியோ வந்தால் நெற்றியில் மருந்து போட்டால் உஷ்ணம் தணியும்.                     மற்ற இரண்டு ஒளி நாடிகளில், ஒன்று சூரிய நாடி; இது வலது கண்ணின் நாடி, மற்றொன்று சந்திர நாடி; இது இடது இடது கண்ணின் நாடி. இந்த இரண்டு நாடி ஒளிகளும் கண்களிலிருந்து வெளி உலகத்தைப் பார்த்த